
பூஜை எந்த இடத்தில் வேண்டுமானாலும் இருக்கலாம், ஆனால், அது குளியல் அறை அல்லது கழிப்பறை அல்லது பயன்பாட்டு அறைக்கு அடுத்ததாக அமைந்திருக்கக் கூடாது. அடுக்கு மாடி வீடுகளில் குளியல் அறை அல்லது கழிப்பறைக்கு கீழே அல்லது மேலே வீடு அமைந்திருக்கக் கூடாது. அதற்கு ஒரு எளிய காரணம் உள்ளது. அதாவது பிற சடங்குகளைத் தொடர்ந்து, பூஜை அறையில் விளக்கு ஏற்றும் பொழுது அல்லது கடவுளுக்கு மலர்களை அர்ப்பணிக்கும் பொழுது, அல்லது கற்பூரம் ஏற்றும் பொழுது, அல்லது ‘அகர்பத்தி’ போன்ற வாசனை ஊதுபத்திகளை ஏற்றும் பொழுது நேர்மறை ஆற்றல் உற்பத்தி செய்யப்படுகிறது. பிரார்த்தனை மூலமாக, அறிவாற்றலுக்கும் புத்திக் கூர்மைக்கும் ஆஞ்னா சக்கரத்தை ஆற்றல்படுத்த முடியும். அதே போல, கடவுளுக்கு மிக நெருக்கமான வீடுபேறுக்காக சஹஸ்ர சக்கரத்தை ஆற்றல்படுத்த முடியும்.
இப்போது, குளியல் அறை அல்லது கழிப்பறைக்கு அருகில் பூஜை அறை அமைக்கப்பட்டிருந்தால், அது பல விதமான எதிர்மறை ஆற்றலை உற்பத்தி செய்து, சுற்றுபுறச் சூழலில் பரவியுள்ள சம நிலைக்கு ஊறு விளைவிக்கும். வீட்டில் நேர்மறை ஆற்றலைப் பெறுவதில் அல்லது உற்பத்தி செய்வதில் உள்ள வழிமுறைகளை மிகத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம். இந்தச் சிக்கல்களுக்கு சரல் வாஸ்து மிகவும் எளிமையான மற்றும் விஞ்ஞானரீதியான தீர்வுகளை வழங்குகிறது.

